அதிசயநாய் ரோஜர்
அதிசயநாய் ரோஜர் செய்த துப்பறியும் சாகசங்களை இந்தக் கதை தொகுப்பில் நீங்கள் படிக்கலாம். ரோஜர் என்பது சாதாரண நாய் அல்ல. அது சிறுத்தையைப்போல ஓடக்கூடியது, சிங்கத்தைப்போல வலிமையானது, ஒரு சி ஐ டியைப்போல யோசிக்கும் அறிவுத்திறன் கொண்டது. மேலும் நகைச்சுவை உணர்வு நிரம்பியது.
ரோஜரின் சாகசங்களைச் சொல்லும் இந்தக் கதைகள் அழகர்சோலை என்ற சிறுவர்மாத இதழில் துப்பறியும் ரோஜர் என்ற பெயரில் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து வெளிவந்து சிறுவர்களை பரவசப்படுத்தியது.
இந்தக் கதைகளை படித்த சிறுவரும் சிறுமியரும், ஏராளமான எண்ணிக்கையில் கடிதம் மூலமாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அவற்றில் சிறந்த கருத்தை தெரிவித்தவர்களுக்கு ஒரு திருக்குறள் நூல் பரிசாக அளிக்கப்பட்டது.
இந்தக் கதைகளைப் படித்து விட்டு பல குழந்தைகள் ரோஜர் நாய் எங்கே இருக்கு ? அதைப் பார்க்க முடியுமா? அது என்ன சாப்பிடும் ? என்றெல்லாம் என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆர்வத்தோடு கேட்டனர். இந்தக் கதைகளைக் கேட்ட எனது மகன் குமாரவிஜயன், அப்போது அவன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் . தெருவில் நின்ற ஆட்டோரிக்ஷாவைக்காட்டி அப்பா , இந்த ஆட்டோவை ரோஜர் தாண்டிக்குதிக்கும் இல்லே என்பான். அந்த அளவிற்கு சிறுவர்களின் மனதில் ரோஜர் என்ற அதிசய நாயின் சாகங்கள் கொள்ளை கொண்டு விட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக