சுழலும் பூமியும் சுற்றுப்புற பாதுகாப்பும்
இந்தப் பூமியில் வாழுவதற்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை மற்ற உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கூட இருக்கிறது.
தெய்வத்திற்கும் விலங்குகளுக்கும் இடையில் நீண்டு கிடக்கும் ஒரு கயிறுதான் மனிதன் என்கிறார் ஜெர்மன் தத்துவ அறிஞர் நியட்ஷே. இயற்கையை சீர்குலைத்து அபாயத்தை ஏற்படுத்துகிறவர்கள் மனிதர்கள் தான்.
ஒரு பூவுக்கு ஏற்படும் நெருக்கடி நட்சத்திரங்களையே அசைத்துப் பார்க்கும் என்பதே இயற்கை விதி. பாண்டா கரடியும், நீலத்திமிங்கிலமும் உருவத்தில் பெரியவை ஆனால் இவைகள் நமது அலட்சியத்தினால் அழிந்து வருகின்றன.
சூழல் விழிப்புணர்வு குறித்து நான் வானொலியில் சொன்ன கருத்துக்களை விரிவாக்கம் செய்து இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறேன். வாசகர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நூலின் நோக்கம் பூங்கொடி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது.